Thursday, May 20, 2010

ஹைக்கூ கவிதைகள்

கவிதை # 1

நான் அழும்போது
என் கண்ணீர் துடைக்க மூன்றாவது கை
என் தாய்

கவிதை #2

மதம் பிடிக்காதவரையில்தான்
மக்களுக்கு ஆசீர்வாதம்
கோயில் யானை

கவிதை # 3

புரியாதவர்களுக்கும்
புரிந்துவிடும் மொழி
மழலை

கவிதை #4

குபேரனும்
குடுவைச்சாம்பலாவான்
மின்சார சுடுகாடு

No comments:

Post a Comment